Friday, July 29, 2011

புதிய தமிழ் காமெடிகள் (ஜோக்ஸ்) lol - Part 2

அந்த கிராமத்தில் எங்க பார்த்தாலும் குண்டுசியா இருக்கு ஏன்?
அது மிகவும் பின்தங்கிய கிராமம்.

"இடுக்கண் வருங்கால் நகுக"
சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா?

ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.

எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?


-எப்போதோ படித்தது ..... 

No comments:

Post a Comment